Ad Widget

டெங்கு தொற்றுக்கு 9 பேர் நேற்று அனுமதி

யாழ்.மாவட்டத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட ஒன்பது பேர் நேற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவரும், கோப்பாய் மற்றும் யாழ்.சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருந்து தலா மூவருமாக ஒன்பது பேர் இவ்வாறு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் இந்தமாதம் யாழ். போதனா வைத்தியசாலையில் டெங்கு நோய்த்தொற்றுக்கு இலக்காகி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த வருடத்தில் நேற்று வரை 895 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் இந்த நோயின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் உள்ளதாக சுகாதாரப் பகுதியினர் எச்சரித்துள்ளதுடன் பொதுமக்கள் டெங்கு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related Posts