Ad Widget

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனை சர்வர்களை ஹேக் செய்த ஹேக்கர்கள்

இந்தியாவின் பிரபல பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளின் டுவிட்டர் பக்கங்கள் மற்றும் இமெயில்கள் ஹேக் செய்யபட்டு உள்ளன. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த சென்னை அப்பல்லோ மருத்துவ குழுமத்தின் சர்வர்களை லிஜியான்(Legion) என்ற ஹேக்கர்கள் குழு ஹேக் செய்து அதில் இருந்த தகவல்களை திருடியுள்ளதாக செய்திகள் வெளியாகின.

காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் பேஜ் , ராகுல் காந்தி , விஜய் மல்லையா , என்டிடிவின் ஊடகவியலாளர்களான ரவிஸ் குமார் மற்றும் பரக்கா தத் ஆகியோரது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கங்களையும் Legion என்ற ஹேக்கர்கள் குழு ஹேக் செய்து அதில் இருந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து, வாஷிங்டன் போஸ்ட் மற்றும் பேக்டரி டெய்லி டாட் காம் ஆகிய ஊடகங்களுக்கு Legion என்ற ஹேக்கர்கள் குழுவின் உறுப்பினர் ஒருவர், குறிப்பிட்ட டுவிட்டர் பக்கங்களை முடக்கியது தாங்கள் தான் என்றும் பேட்டியளித்துள்ளார்.

ஹேக்கர்களுடைய அடுத்த குறி இந்திய அரசின் மின்னஞ்சல் சேவையை வழங்கக்கூடிய sansad.nic.in என்ற சர்வர் தான் என்று அந்த ஹேக்கர் கூறியுள்ளான்.

தாங்கள் ஹேக் செய்த எல்லா தகவல்களையும் வெளியிட்டால் இந்தியாவில் பெரிய குழப்பம் ஏற்படும் என்பதால் அவற்றை வெளியிடாமல் தவிர்த்துள்ளோம் என்று ஹேக்கர்கள் குழுவின் உறுப்பினர் ஒருவர் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Related Posts