Ad Widget

ஞா.குகநாதனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

உதயன் நாளிதழின் முன்னாள் செய்தியாசிரியர் ஞா.குகநாதனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவித்தது ஐ.பி.ஸி. தமிழ் தொலைக்காட்சி.

kuganathan

சுவிற்சர்லாந்தில் ஐ.பி.ஸி. தமிழ் தொலைக்காட்சியின் ஆரம்ப விழா கடந்த 27 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்விலேயே சாதனையாளர் விருது குகநாதனுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சனல் 4 தொலைக்காட்சியின் கெலும் மக்ரே, ஊடகவியலாளர் இரா.துரைரெட்ணம், கலைஞர் க.செ.துரை, கவிஞர் கிருஷ்ண அம்பலவாணர், ஆகியோருக்கும் சாதனையாளர் விருதுகள் வழங்கிக்கௌரவிக்கப்பட்டன.

80களின் ஆரம்பத்தில் செய்தியாளராக யாழ்ப்பாணத்தில் தனது பணியைத் தொடங்கிய குகநாதன் உதயன் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அப்பத்திரிகையுடன் இணைந்தார்.

பிரதம செய்தியாளர், செய்தி ஆசிரியர் பதவிகளை வகித்த குகநாதனை கொலை செய்யும் நோக்குடன் 2011 ஜூலை 29 அன்று மர்ம நபர்கள் தாக்கினர். எனினும் இதிலிருந்து தப்பித்த அவர் பின்னர் சுவிஸில் தஞ்சம் புகுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts