Ad Widget

சுவிஸ் தூதுவர் யாழ். வருகை

இலங்கைக்கான சுவிஸ்லாந்து உயர்ஸ்தானிகர் கீன்ஸ் வோக்கர் நிடர்கோன் நேற்று யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்.

15211873004_e87be21f91

நேற்று பிற்பகல் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி சந்தித்து வடக்கின் அபிவிருத்திதிட்டபணிகள் தொடர்பாக கலந்துரையாடினார்.

இதில் உட்கட்டமைப்பு, விவசாயம், கல்வி, சுகாதாரம்,சமூக நலன் மேன்பாடுகள் பற்றியும் வடக்கில் அடைந்துள்ள மாற்றங்கள் தொடர்பாக உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டது.

மூன்று நாள் வடமாகாணத்தில் தங்கியிருப்பதுடன் சுவிஸ்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளின் செயற்பாடுகளையும் புனர்வாழ்வு பெற்று வாழும் இளைஞர்களையும் இடைத்தாங்கல் முகாமில் வாழும் மக்களையும் பார்வையிடயுள்ளார்.

Related Posts