அரியாலை கனகலிங்கம் வீதியில் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று தங்கியிருந்த தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் வருகைதந்த பஸ் மீது வியாழக்கிழமை (21) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் வெளிப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது இனந்தெரியாதோர் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.