Ad Widget

சுன்னாகத்தில் பிறந்த குழந்தையை குழி தோண்டி புதைத்த தாய்

யாழ் சுன்னாகம் கிழக்குப்பகுதியில் பெண் ஒருவர் குழந்தையைப் பெற்று அதனை குழி தோண்டிப் புதைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குழந்தை பிறக்கும் போதே இறந்த நிலையில் இருந்ததால் குறித்த பெண் குழுந்தையை குழி தோண்டி புதைத்துள்ளார்.இந் நிலையில் குறித்த பெண் யாழ் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்ற போது வைத்தியர்கள் பெண் குழந்தை பெற்றெடுத்ததைக் கண்டுபிடித்துள்ளதுடன் இது குறித்து சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.குறித்த பெண் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Posts