Ad Widget

சாவகச்சேரி சமாதான நீதவானுடைய வீட்டின் மீது தாக்குதல்!!

யாழ்ப்பாணம் மட்டுவில் வின்சன் வீதியிலுள்ள வீடொன்றின் மீது வாள் மற்றும் கோடாரிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாவகச்சேரி சமாதான நீதவானுடைய வீட்டிலேயே இந்த சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது.

இவரது வீட்டிற்கு தலைக்கவசம் இல்லாது, இலக்கத் தகடுகள் அற்ற மோட்டார் சைக்கிளில் சென்ற இருபது பேர் கொண்ட இனந்தெரியாத நபர்களே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதல் நடத்திய குறித்த குழுவினர் மட்டுவில் சந்தியிலும் பல மணி நேரங்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் பதற்றமான நிலையில் காணப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Related Posts