Ad Widget

சாவகச்சேரியில் கோர விபத்து: 10 பேர் பரிதாப மரணம்

சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்து இன்று (சனிக்கிழமை) மதியம் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதன் போது யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த அரச பேருந்து ஒன்றும் கொழும்பில் இருந்து சென்ற ஹயஸ் ரக வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதாலேயே குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

வானில் வந்த 7 பேர் உள்ளடங்களாக 10 பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

இதில் உயிரிழந்தவர்கள் தென்னிலங்கைச்சேர்ந்த சிங்கள சுற்றுலாப் பயணிகள் என தெரிவிக்கப்படுகிறது

Related Posts