Ad Widget

சாவகச்சேரியில் குண்டு மீட்பு!!

சாவகச்சேரி – தனங்கிளப்பு வீதியில் அருகில் பனை வடலிக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு, சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் செயலிழக்கப்பட்டதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியால் சென்றவர்கள் இக்குண்டை அவதானித்து பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் வழங்கினர்.

இது தொடர்பில் பொலிஸார், நீதிமன்றத்தில் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அங்கு சென்ற விசேட அதிரடிப் படையினர் குண்டை மீட்டு, பாதுகாப்பான இடத்தில் செயலிழக்க வைத்தனர்.

Related Posts