முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு நீண்ட நாட்களின் பின்னர் விஜயம் மேற்கொள்ளும் அவர், யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெறும் மக்கள் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.
பின்னர் தெல்லிப்பழை, சங்கானை போன்ற இடங்களுக்கும் செல்லவுள்ளதுடன் அப்பகுதி மக்களுடனும் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் மக்கள் சந்திப்புகளை மேற்கொண்டதன் பின்னர் அவர், கிளிநொச்சிக்கு செல்லவுள்ளார்.
அங்கு பளை இராஜேஸ்வரி மண்டபத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பிலும் கிளிநொச்சி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் மண்டபத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பிலும் கலந்துகொள்ளவுள்ளார்.