Ad Widget

கோரோனா தொற்றுள்ளோர் எண்ணிக்கை 49ஆக உயர்வு – இன்று மேலும் 8 பேர் அடையாளம்

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 8 பேர் இன்று (மார்ச் 18) புதன்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண்ணுடன் 50 பேர்) அதிகரித்துள்ளது.

நாட்டில் கோரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் 212 பேர் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்படுகின்றனர்.

அத்துடன், மட்டக்களப்பு, வவுனியா உள்ளிட்ட 14 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 2 ஆயிரத்து 300 பேர்வரை தங்கவைத்து கண்காணிக்கப்படுகின்றனர்.

Related Posts