Ad Widget

கொழும்பை வந்தடைந்தது எரிபொருள் தாங்கிய கப்பல்!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் டுபாயிலிருந்து கொள்வனவு செய்த 40000 மெட்ரிக் டொன் எரிபொருளை தாங்கிய கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்த கப்பலில் 92 ஒக்டைன் ரக பெற்றோல் 32500 மெட்ரிக் டொன்னும், ஒக்டைன் 95 இற்கான பெற்றொல் 7500 மெட்ரிக் டொன்னும் காணப்படுவதாக கூறப்படுகின்றது.

இதனை பரிசோதிப்பதற்காக அங்கு பரிசோதனையாளர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர் என கனிய எண்ணெய் வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாளை பிற்பகல் 2.00 மணி முதல் நாட்டின் சகல பகுதிகளுக்கும் பெற்றோல் விநியோகிக்கும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.

Related Posts