Ad Widget

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இணக்கப்பாடுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் நிறைவு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இணக்கப்பாடுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் நிறைவடைந்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) மாலை 5 மணி முதல் இரவு 8 வரை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இணக்கப்பாடுகள் எதுவும் எட்டப்படாத நிலையில், கூட்டம் நிறைவடைந்துள்ளதாக கூட்டமைப்பின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவளிப்பதாயின் தமிழர் நலன் பேணும் விடயங்கள் தொடர்பில் எழுத்து மூல உறுதிப்பாட்டை கூட்டமைப்பு பெற வேணடும் என ரெலோ பிரதிநிதிகள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.

எழுத்து மூல உறுதிமொழியை வலியுறுத்துவது பாதகமான அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் அதைத் தவிர்ப்பது நல்லது என சம்பந்தன் கருத்து வெளியிட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

அத்துடன், நிபந்தனையாக விதிக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன், பல விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் இரா.சம்பந்தன், மாவை சோ.சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், புளொட் சார்பில் த.சித்தார்த்தன், ஆர்.இராகவன் ஆகியோரும், ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், என்.ஸ்ரீகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், கோவிந்தன் கருணாகரம் (ஜனா), எஸ்.வினோநோகராதலிங்கம் ஆகியோரும் நேற்றைய கூட்டத்தில் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts