Ad Widget

குமுதினி பயணிகள் படகின் சேவை நேரத்தில் மாற்றம்

குறிகாட்டுவானுக்கும் நெடுந்தீவுக்கும் இடையில் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டுள்ள குமுதினிப் படகு, நெடுந்தீவுக்குச் செல்லும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என நெடுந்தீவு பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதுவரை குறிகாட்டுவானில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்ட மேற்படி படகு, ஞாயிற்றுக்கிழமை (24) தொடக்கம் காலை 8 மணிக்கு புறப்படும். இந்த நேரமாற்றம் மறு அறிவித்தல் வரை கடைப்பிடிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts