Ad Widget

கீரிமலையில் தவறவிடப்பட்ட குழந்தைகள் தந்தையிடம் ஒப்படைப்பு

கீரிமலை புனித தீர்த்தத்திற்கு பிதிர்க்கடன் செய்ய சென்றவர்கள் தமது இரு சிறுவர்களை தவறவிட்டு சென்றுள்ளனர்.

அளவெட்டி பகுதியிலிருந்து நேற்று காலை 10.௦௦ மணியளவில் பேரூந்து ஒன்றில் கீரிமலைக்கு சென்ற இவர்கள் தமது இரு சிறுவர்களை அங்கு தவறவிட்டு வீடு சென்று பார்த்த போது குழந்தைகளை காணவில்லை.

இந்த நிலையில் பெற்றோரை தவறவிட்டு அழுது கொண்டு நின்ற குழந்தைகள் இருவரையும் கீரிமலை ஆலய பொலிசார் மீட்டுள்ளனர்.

குறித்த செய்தியறிந்த சம்பவ இடத்துக்கு சென்ற வலி வடக்கு தவிசாளரும் குழந்தைகளை மீட்ட பொலிசாரும் குழந்தைகளை தேடிவந்த தந்தையிடம் விசாரணைகளை மேற்கொண்டு அவருடைய குழந்தை தானென உறுதிப்படுத்திய பின்னர் ஒப்படைத்துள்ளார்.

Related Posts