Ad Widget

காணாமற் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழுவின் அமர்வு இன்று கோப்பாயில்!

காணாமற் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று தொடக்கம் மார்ச் மாதம் முதலாம் திகதி வரை யாழ் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.

கடந்த வருடம் மார்கழி மாதம் இவ் அமர்வுகளின் இரண்டாம் கட்ட விசாரணைகள் இடம்பெற்றிருந்த நிலையில் அதன்போது யாழ் மாவட்டத்தில் இடம்பெறாத பிரதேச செயலக பிரிவுகளில் இவ் அமர்வுகள் இடம்பெறவுள்ளது.

அந்தவகையில் இன்று சனிக்கிழமை 27 ஆம் திகதி கோப்பாய், பருத்தித்துறை, கரவெட்டி பிரதேசத்தை சேந்தவர்களுக்கு கோப்பாய் பிரதேச செயலகத்திலும், எதிர்வரும் 28 ஆம் திகதி ஞாயிற்றுகிழமை வேலணை, ஊர்காவற்துறை, காரைநகர், நெடுந்தீவு ஆகிய பிரதேசங்களை சேந்தவர்களுக்கு வேலணை பிரதேச செயலகத்திலும், எதிர்வரும் 29 ஆம் திகதி மருதங்கேணி மற்றும் சாவகச்சேரி பிரதேச பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு சாவகச்சேரி பிரதேச செயலகத்திலும் மறுநாள் மார்ச் மாதம் முதலாம் திகதி சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்குட்பட்டவர்களுக்கு சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் இந்த அமர்வுகள் இடம்பெறவுள்ளது.

27,28, 29 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள விசாரணைகள் காலை 8.30 மணி தொடக்கம் 5.30 மணிவரையும், மார்ச் மாதம் முதலாம் திகதி காலை 8.30 மணி தொடக்கம் மாலை 3 மணிவரை விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.

Related Posts