Ad Widget

கந்தரோடையில் மூவாயிரம் ஆண்டுகள் பழைமையான அம்மிக் கல் கண்டுபிடிப்பு

ammikkalயாழ் கந்­த­ரோடைப் பகு­தியில் இருந்து சுமார் மூவா­யிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்ட அம்மிக்கல் ஒன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ளது. அக்­கா­லத்தில் பயன்­ப­டுத்­தப்­பட்ட மண்சட்டி, பானை­களின் ஓட்டுத் துண்­டுகள் மற்றும் கல் மணிகள் என்­ப­னவும் அந்த இடத்துக்கு அருகாமையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த நவம்பர் மாதம் கந்­த­ரோடைப் பகு­தியில் மேற்­கொண்ட அகழ்­வா­ராய்­சியின் போது இந்த தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.

அதனையடுத்து இப்பொருட்கள் எக்காலத்துக்குரியவை என்பதை கண்டுபிடிப்பதற்காக அவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தமிழ்­நாடு தஞ்­சாவூர் தமிழ்ப் பல்­க­லைக்­ க­ழ­கத்­திற்கு கடந்த டிசம்பர் மாதம் ஆய்­விற்­காக அனுப்பி வைத்­தனர்.

ஆய்வின் முடிவில் அம்மிக்கல் கிறிஸ்­து­வுக்கு முன் சுமார் மூவா­யிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்­டது எனக் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. ஓட்டுத் துண்­டுகள் சுமார் 25௦௦ ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்­டவை எனக் கண்டறியப்­பட்­டுள்­ளன.

தஞ்­சாவூர் தமிழ்ப் பல்­க­லைக்­ க­ழ­க கல்­வெட்­டுக்கள் மற்றும் தொல்­லியல் பேரா­சி­ரியர் கலா­நிதி மா. பவானி இதனை ஆய்­விற்கு உட்­ப­டுத்தி இருந்தார்.

தரை­யி­லி­ருந்து நாலடி ஆழத்தில் தோண்­டும்­போதே நான்கு கால்­க­ளை­யு­டைய இந்த அம்­மிக்கல் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

அத்­துடன் கல் மணிகள், பானை ஓடுகள், ரோமா­னி­யர்­களின் நாண­யங்கள் இரண்டாயிரத்து 300 ஆண்­டுகள் பழ­மை­யான சுடு­மண்­ணினால் செய்­யப்­பட்ட சீன நாட்டின் பானை ஓடுகள், தாழி ஓடுகள், கறுப்புச் சிவப்­புப்­பானை ஓடுகள் போன்ற பொருட்­களும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டதாக அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்வம்­மிக் ­கல்லின் மாதி­ரியை இந்­தியா, தமிழ் நாட்டில் கொடு­மலை, கன்­னி­யா­கு­மரி போன்ற இடங்­களில் கண்­டெ­டுக்­கப்­பட்ட தமி­ழர்­களின் பாரம்­ப­ரிய அம்மிக் கல்­லுடன் ஒப்­பிட்டுப் பார்த்­த­போது அவற்றுடன் இந்தக் கல்லும் ஒத்துப்போவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனாலேயே இவ்வகழ்வாராய்ச்சியின் முடிவை உடனடியாக அறிவிக்க முடியவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

Related Posts