யாழில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பமான காலநிலையை தொடர்ந்து இன்று மழை பெய்து வருகின்றது.
இன்று முற்பகல் யாழ் நகர் பகுதி மற்றும் வலிகாமம் மேற்கு உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.
வட பகுதியில் கடந்த சில நாட்களாக அதிகளவான வெப்பநிலை காணப்பட்டது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருந்தனர். இந்நிலையில் இன்று திடீரென மழை பெய்து வருகின்றது. இதனால் மக்கள் பெரும் மகிழ்சியடைந்துள்ளனர்.
கடும் வெப்பத்தின் கொடுமையை தாங்க முடியாது நேற்றைய தினம் முதியவர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.