Ad Widget

கடும் மழை நலன்புரி முகாம் மக்கள் பாதிப்பு

தற்போது பெய்து வரும் கடும் மழையினால் இடம்பெயர்ந்து நலன்புரி முகாமில் தங்கியிருக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுன்னாகம் சபாபதி நலன்புரி நிலையத்தில் வசித்து வரும் மக்கள் வெள்ளத்தினால் தங்கள் இயல்பு வாழ்க்கையினை இழந்துள்ளனர். சமைக்க முடியாத நிலை, வீட்டிற்கு ஒழுக்கு, வெள்ளம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் முகாம் மக்களின் கோரிக்கையினையடுத்து வீடுகள் ஒவ்வொன்றிற்கும் இரண்டு சாக்குகள் வீதம் 500ற்கு மேற்பட்ட சாக்குகள் விவசாய அமைச்சரால் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

எனினும் அங்குள்ள மக்களுக்கு கூடார விரிப்புக்கள், உணவுகளே தற்போது அவசியமாகவுள்ளது. எனவே மக்கள் மீது கருணையுள்ள அனைவரும் அவற்றை தாமாகவே முன் வந்து வழங்க வேண்டும்.

இதுபோல யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து நலன்புரி நிலைங்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts