கடற்படையினரின் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ். மண்டைதீவு 2ம் வட்டாரத்தினைச் சேர்ந்த 60 வயது முதியவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
யாழ். நகரப் பகுதியில் கருவாட்டுக் கடை வைத்திருக்கும் இவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மோட்டார் சைக்கிளில் கருவாடு கொண்டு சென்ற போதே மண்டை தீவு பகுதியில் இருந்து வந்த மண்டைதீவு கடற்படையினரின் வாகனம் மோதியதில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இதன்போது, படுகாயமடைந்த அவர் பின்னர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.