Ad Widget

கச்சதீவில் கட்டப்படும் அந்தோனியார் தேவாலயத்துக்கு ஜெயலலிதா எதிர்ப்பு!

இலங்கை அரசு கச்சத்தீவில் தமிழக மீனவர்களின் ஒப்புதல் மற்றும் பங்களிப்பு இல்லாமல் புனித அந்தோனியார் தேவாலயத்தை மீண்டும் கட்டுவது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று செவ்வாய்கிழமை பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.

நேற்று முன்தினம் திங்களன்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ஏழு தமிழக மீனவர்களை மீட்கக் கோரி எழுதியுள்ள கடிதத்தில், தேவாலயத்தை கட்டும் இந்த முயற்சியானது கடந்த இரண்டு வருடங்களில் அதிகரித்து வரும் தமிழக மீனவர்களின் கைதுகளோடு தொடர்புடையது என்று குறிப்பிட்டுள்ளார்.

மீன்பிடி தடை காலம் முடிந்தவுடன், ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற ஏழு தமிழக மீனவர்களை, அவர்களது விசை படகுகளுடன், இலங்கை கடற்படை செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கைது செய்தது.

கைதான மீனவர்கள் தலைமன்னாருக்கு கொண்டுசெல்லப்பட்டனர். தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் தொடர் நிகழ்வுகள் அவர்களுக்கு விரக்தியை ஏற்படுத்துகிறது என்று குறிபிட்டுள்ளார்.

சர்வதேச கடல் எல்லை குறித்த வழக்கு இந்தியாவின் உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க இந்திய அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும் என்றார்.

Related Posts