Ad Widget

ஓ.பி.எஸ். பின்னணியில் திமுக உள்ளது!! சசிகலா பேட்டி!

ஓபிஎஸ்க்கு பின்னணியில் திமுக உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். அதிமுகவினர் ஒரே குடும்பமாக உள்ளனர், எந்தப்பிரச்சனையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னை போயஸ் கார்டனில் தங்கியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, ஓபிஎஸின் அதிரடி பேட்டிக்கு பின்னர் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து முதல்முறையாக அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது இரட்டை விரலை காண்பித்து தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது

“அதிமுகவினர் ஒரே குடும்பமாக உள்ளனர். எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை.

பன்னீர்செல்வத்தை நாங்கள் மிரட்டவில்லை. நீங்களே பார்த்தீர்கள் அவர் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். தூண்டுதல் காரணமாகவே பன்னீர்செல்வம் பழிபோடுகிறார். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதைத்தான் நானும் நினைக்கிறேன்

ஓபிஎஸ்க்கு பின்னணியில் திமுக உள்ளது. காரணம் சட்டசபைக் கூட்டத்தில் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து, சிரித்துக் கொண்டனர்.பன்னீர்செல்வத்திற்கு எதிராக உரிய கட்சி ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு சசிகலா செய்தியாளர்களிடம் பேசினார்.

செய்தியாளர்களிடம் பேசிய போது அவரது முகம் பதற்றத்துடன் காணப்பட்டது. இருப்பினும் அடிக்கடி சிரித்து அதனை அவர் மறைத்தார். சசிகலாவின் முதல் செய்தியளார் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts