Ad Widget

ஒற்றையாட்சி மூலம் ‘சமஷ்டி’ பண்புகளை பெறமுடியாது

ஒற்றையாட்சி மூலம் சமஷ்டி பண்புகளை பெறமுடியாதென்றும் அதனை ஏற்றுக்கொள்ள தயாரில்லையென்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பானது சமஷ்டி என்ற சொல்லில் தங்கியிருக்கக் கூடாதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்திருந்தமைக்கு பதிலளிக்கும் வகையில் மாவை மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.

அத்தோடு, 13ஆவது திருத்தச் சட்டம் குறித்தோ மாகாண சபையின் அதிகாரங்கள் தொடர்பாகவோ பேசவேண்டிய தேவை கூட்டமைப்பிற்கு இல்லையென குறிப்பிட்ட மாவை, சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு மற்றும் வடக்கு – கிழக்கு இணைப்பு போன்ற விடயங்கள் தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாட்டை ஏற்கனவே ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தெளிவாக எடுத்துக்கூறியுள்ளதாகவும் கட்சியின் தலைவர் அல்லாத எவருக்கும் பதில்கூற வேண்டிய கடப்பாடு கூட்டமைப்பிற்கு இல்லையென்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts