Ad Widget

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் 32 இலங்கையர்கள் இணைவு

இலங்கையர்கள் 32 பேர் சிரியாவிற்கு சென்று ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்று வருகின்ற வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், சில இணையத்தளங்கள் போலியான வதந்திகளை பரப்பக்கூடிய உண்மையற்ற தகவல்களை வெளியிடுகின்றன. இதனால் பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்.

இதேவேளை நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக செய்திகளை வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட செய்தி இணையத்தளமொன்றின் ஆசிரியரை சர்வதேச பொலிஸார் ஊடாக கைது செய்து இலங்கைக்கு கொண்டு வந்து சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் நீதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Posts