Ad Widget

எவ்வாறான அவசர நிலையையும் எதிர்கொள்ளும் நிலையில் இராணுவம்!

வடக்கில் எவ்வாறான அவசர நிலையையும் சமாளிக்கும் வகையில் இராணுவத்தினர் தயார் நிலையில் இருக்கின்றனர் என யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ். சாவகச்சேரி பகுதியில் நேற்று வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. இது தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.

இந்நிலையில், முழுமையான விசாரணைகளின் பின்னரே, கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் நோக்கங்கள் குறித்து அறிந்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்ளும் வகையில், இராணுவத்தினர் தயார் நிலையில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts