Ad Widget

எழுக தமிழா பேரணி அரசியல் தீர்வு முயற்சியை குழப்பிவிடும்! சுமந்திரன் எம்.பி அச்சம்

மக்­க­ளது எழுச்­சியை தென்­ப­கு­தி­யிலே வேறு வித­மாக சித்­த­ரிப்­ப­வர்­களும் இருக்­கின்­றார்கள். தற்­போதும் அவர்கள் தென்­ப­கு­தி­யிலே தமிழ் மக்கள் மீண்டும் ஆயு­த­மெ­டுக்கும் சாத்­தி­யங்கள் உள்­ளன போன்ற பிர­சா­ரங்­களை செய்து கொண்டு இருக்­கி­றார்கள். ஆனாலும் செயற்­பா­டுகள் வெற்­றி­பெ­ற­வில்லை. இவ்­வா­றான சூழ்­நி­லையில் வடக்கில் மக்களைத் திரட்டி அரசிற்கு எதிராக எழுச்சியைஏற்படுத்த முனைவதானது இப்­ப­டி­யான நிகழ்­வு­களை காண்­பித்து பிர­சாரம் செய்­வ­தற்கு அவர்­க­ளுக்கு கரு­வி­யாக அமைந்­து­வி­டலாம். இத்­த­கைய செயற்­பாடு, உரு­வா­க­வுள்ள அர­சியல் தீர்வை குழப்பும் முயற்­சி­யா­கவும் அமை­யலாம் என்று தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எனினும் அதற்­காக மக்கள் எழுச்­சி மேற்­கொள்­ள­க்கூ­டா­தென்று நான் கூற வர­வில்லை. மக்­க­ளது உணர்­வுகள் வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்டும். ஆனால் தமிழ் மக்­க­ளுக்கு ஓர் அர­சியல் தீர்­வா­னது கிடைத்­து­விடக் கூடாது என்று செயற்­ப­டுப­வர்­களின் கரு­வி­யாக மக்­களும் அவர்­க­ளது எழுச்­சி­களும் பயன்­பட்­டு­வி­டக்­கூ­டாது என்­பதே முக்­கிய விட­ய­மாகும். எனவே இச் சந்தர்ப்பத்தை சரியான முறையிலே கையாளாதுவிட்டால் நாம் தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள அவ­ரது அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

குறித்த விடயம் தொடர்­பாக அவர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

காணி­வி­டு­விப்பு, தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­விப்பு தொடர்­பாக அர­சாங்கம் தாம­த­மாக செயற்­ப­டு­வது தொடர்பில் மக்­க­ளுக்கு அதி­ருப்தி உள்­ள­துடன் எமக்கும் அதில் அதி­ருப்தி உள்­ளது. இதனை நாம் பாரா­ளு­மன்­றத்­திலும் தெரி­வித்­தி­ருந்தோம். இந்­நி­லையில் இது தொடர்­பாக மக்கள் விழிப்­ப­டையச் செய்­கின்றபோது வேறு நிகழ்ச்சிநிரலில் இயங்­கு­கின்­ற­வர்கள் பலர் இருக்­கின்­றார்கள். விசே­ட­மாக அர­சியல் தீர்வு ஏற்­ப­டக்­கூ­டாது என்று கங்­கணம் கட்­டிக்­கொண்டு செயற்­ப­டு­ப­வர்­களும் தமிழர் தரப்­பிலே இருக்­கின்­றார்கள்.

மக்­க­ளது எழுச்­சியை தென்­ப­கு­தி­யிலே வேறு வித­மாக சித்­த­ரிப்­ப­வர்­களும் இருக்­கின்­றார்கள். தற்­போதும் அவர்கள் தென்­ப­கு­தி­யிலே தமிழ் மக்கள் மீண்டும் ஆயு­த­மெ­டுக்கும் சாத்­தி­யங்கள் உள்­ளன போன்ற பிர­சா­ரங்­களை செய்து கொண்டு இருக்­கி­றார்கள். ஆனாலும் செயற்­பா­டுகள் வெற்­றி­பெ­ற­வில்லை. இவ்­வா­றான சூழ்­நி­லையில் இப்­ப­டி­யான நிகழ்­வு­களை காண்­பித்து பிர­சாரம் செய்­வ­தற்கு அவர்­க­ளுக்கு கரு­வி­யாக அமைந்­து­வி­டலாம். இத்­த­கைய செயற்­பாடு, உரு­வா­க­வுள்ள அர­சியல் தீர்வை குழப்பும் முயற்­சி­யா­கவும் அமை­யலாம். எனினும் அதற்­காக மக்கள் எழுச்­சி மேற்­கொள்­ள­க்கூ­டா­தென்று நான் கூற வர­வில்லை. மக்­க­ளது உணர்­வுகள் வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்டும். ஆனால் தமிழ் மக்­க­ளுக்கு ஓர் அர­சியல் தீர்­வா­னது கிடைத்­து­விடக் கூடாது என்று செயற்­ப­டுப­வர்­களின் கரு­வி­யாக மக்­களும் அவர்­க­ளது எழுச்­சி­களும் பயன்­பட்­டு­வி­டக்­கூ­டாது என்­பதே முக்­கிய விட­ய­மாகும்.

இதே­வேளை, தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பா­னது சரி­யான செய்­தி­யையே மக்­க­ளுக்கு வழங்கி வரு­கி­றது. அந்­த­வ­கையில் கடந்த ஒக்­டோபர் மாதம் ஐ.நா. மனி­த­ உ­ரிமை பேர­வை­யிலே அறிக்­கை­யொன்று சமர்ப்­பிக்­கப்­பட்டு தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது. அதில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­த­தன்­படி புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இவ்­வா­றாக பல வேலைத்­திட்­டங்கள் இடம்­பெ­று­கின்­றன.

இந்­நி­லையில் இவை அனைத்தும் வெற்றிகரமாக முடிந்து விட்டன என நான் கூறவில்லை. எனினும் அத்தகைய முழுமைத்தன்மையை செய்ய முடியாது என்றும் நான் கூறவரவில்லை. ஆனால் வெற்றிகரமாக முடிவதற்கான சந்தர்ப்பம் வாய்த்துள்ளது. எனவே இச் சந்தர்ப்பத்தை சரியான முறையிலே கையாளாதுவிட்டால் நாம் தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாக அமையும் எனத் தெரிவித்தார்.

Related Posts