எதிர்க்கட்சித் தலைவருக்குரிய அலுவலகம் இல்லாவிட்டாலும், அரசாங்கம் முன்னெடுக்கும் ஊழல், மோசடிகளைத் தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளை, மக்களுக்காக முன்னெடுக்கும் பணிகள் தொடருமென, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல – நெலும் மாவத்தையிலுள்ள தனது அலுவலகத்தில், நேற்று (வெள்ளிக்கிழமை) புத்தாண்டுக்கான பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், இந்த வருடம், தேர்தல் வருடமென்பதால், அதற்கு முகங்கொடுக்க, தனது முகாமை பலப்படுத்தி வருவதாகக் கூறினார்.
எதிர்கட்சி தலைவர் பதவியில் கிடைக்கப்பெறுகின்ற அரச சுகபோகங்களை எதிர்பார்த்து எதிர்கட்சி தலைவர் பதவியை வகிக்கவில்லை.
எதிர்கட்சி தலைவர் பதவியில் கிடைக்கப் பெறுகின்ற சலுகைகள் இல்லாமலே பொறுப்பு வாய்ந்த எதிர்கட்சி தலைவராக செயற்படுவேன் என கூறினார்.