Ad Widget

ஊடகவியலாளர் சிவராமுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி!

ஊடக சுதந்திரத்திற்காக உயிர் கொடுத்த ஊடகவியலாளர்களுக்கான பொது நினைவு நாள் நினைவேந்தலும் தராகி சிவராமின் 11ஆம் ஆண்டு நினைவு நாளும் யாழ்ப்பாணத்தில் நேற்று பிற்பகல் 03.00 மணிக்கு இடம் பெற்றது.

sivaram-memo-

இதன்போது, மறைந்த ஊடகவியலாளர்கள் நினைவு தூபியில் படுகொலையான ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களிற்கான நினைவு சுடரேற்றலும் மலர் அஞ்சலியும் இடம்பெற்றது.

இதையடுத்து, பிற்பகல் 03.30 மணிக்கு பொதுநூலக மண்டபத்தில் நினைவு உரைகள் மற்றும் ஊடக சுதந்திரத்திற்காக உயிர் கொடுத்த ஊடகவியலாளர்களிற்கான பொது நினைவு நாள் நினைவேந்தல் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளிடப்பட்டது.

இங்கு நினைவுரைகளை கலாநிதி ரகுராம், நிலாந்தன், பாசன, சந்தேசிய பண்டார, ஜோதிலிங்கம் ஆகியோர் ஆற்றினர்.

இந்த நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் ஊடக சுதந்திரத்திற்காக குரல் கொடுக்கும் தெற்கு அமைப்புக்கள், அரசியல் வாதிகள், பொதுமக்கள் என பல ஊடக நண்பர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Related Posts