Ad Widget

உணவு உட்கொண்டுவிட்டு உறங்கச்சென்ற நபர் சடலமாக மீட்பு

யாழ். 3ஆம் குறுக்கு தெருவைச் சேர்ந்த 25 வயதான தர்மசேகரம் வசீகரன் என்பவர்மதிய உணவு உட்கொண்ட பின்னர் உறங்கியவர் மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்றைய தினம் வீட்டில் மதிய உணவு உட்கொண்ட பின்னர் உறங்கச் சென்றுள்ளார். மாலை தேநீர் வழங்குவதற்காக வீட்டில் இருந்தவர்கள் அவரை எழுப்பிய வேளை அசைவற்று கிடந்துள்ளார்.

அதனையடுத்து வீட்டார் அவரை யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

உயிரிழந்த நபருக்கு வலிப்பு நோய் ஏற்படுவதாகவும் , திடீரென படுக்கையில் வலிப்பு நோய் ஏற்பட்டதால் , சுவாசப் பைக்குள் உணவு பதார்த்தம் அடைத்ததால் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த உயிரிழப்பு தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிரேமகுமார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

Related Posts