Ad Widget

உக்ரைன் போர் நிறுத்தப்படாவிட்டால் உலக மக்கள் பட்டினி சாவிற்கு முகம் கொடுக்க நேரிடும் – பதில் ஜனாதிபதி ரணில்

உக்ரைன் போர் நிறுத்தப்படாவிட்டால் உலக மக்கள் பட்டினி சாவிற்கு முகம் கொடுக்க நேரிடும் என பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கூடிய விரைவில் உக்ரைன் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என உலகப் பட்டினி மற்றும் பஞ்சம் தொடர்பிலான மாநாடு ஒன்றில் பங்கேற்று உரையாற்றியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“மேற்குலக நாடுகளின் தடைகளினால் ரஸ்யா மண்டியிடவில்லை. மூன்றாம் உலக நாடுகளே மண்டியிட்டுள்ளன.

ரஸ்யா உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டியது அவசியமானது.

நிபந்தனைகளை விதிக்காது உக்ரைன் அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Related Posts