Ad Widget

உக்ரைனின் மிகப் பெரிய மின் உற்பத்தி நிலையத்தை ரஷ்யா கைப்பற்றியது

ரஷ்யப் படைகள் உக்ரைனின் இரண்டாவது பெரிய மின் உற்பத்தி நிலையத்தை கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் ஆலோசகர் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

கிழக்கு உக்ரைனில் உள்ள சோவியத் கால நிலக்கரி எரியும் Vuhlehirsk மின் உற்பத்தி நிலையத்தை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்ய படையினர் ஒரு சிறிய தந்திரோபாய நன்மையை அடைந்துள்ளனர், அவர்கள் வுஹ்லெஹிர்ஸ்கைக் கைப்பற்றினர்” என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் ஆலோசகர் ஒலெக்ஸி அரெஸ்டோவிச் கூறியுள்ளார்.

இதனிடையே, மூன்று தெற்கு பிராந்தியங்களிலும் ரஷ்யா பாரிய அளவில் துருப்புக்களை நிலைநிறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts