Ad Widget

இளைஞர் யுவதிகள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு!!! : பிரதமர்

இலங்கையில் உள்ள அனைத்து இளைஞர் யுவதிகளுக்கும் வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இராஜகிரியவில் அமைக்கப்பட்ட புதிய மேம்பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர், அவர் ஆற்றிய உரையின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சிறந்த வருமான மார்க்கத்தை வழங்குவதே நல்லாட்சி அரசின் நோக்கம் எனவும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், நாட்டின் அபிவிருத்தி தொடர்பிலும் நல்லாட்சி அரசாங்கம் அதிக கவனம் செலுத்திவருவதாகவும் குறிப்பாக நாட்டின் உட்கட்டுமான வசதிகளை அதிகரிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

Related Posts