Ad Widget

இலங்கைக்கு சட்ட விரோதமாக கொடுக்கப்பட்ட கச்சத்தீவை மீட்க வேண்டும்: மத்திய அரசுக்கு ஜெயலலிதா கோரிக்கை

இலங்கைக்கு சட்டவிரோதமாக விட்டுக் கொடுக்கப்பட்ட கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

jeya - modi

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை முதல்வர் ஜெயலலிதா சந்தித்தார். அப்போது, அவர் பிரதமரிடம் அளித்த 65 பக்க மனுவில் இடம்பெற்றுள்ள முக்கிய கோரிக்கைகள் வருமாறு:

1. பாக் ஜலசந்தியில் உள்ள 285 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட சிறிய பகுதி கச்சத்தீவு. அதன் ஆரம்ப உரிமையாளர் ராமநாதபுரம் ராஜா என்பதை நிரூபிக்க போதுமான வரலாற்று ஆவணங்கள் உள்ளன.

ஆனால், 1974, 1976 ஆகிய ஆண்டுகளில் கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுக்கும் ஒப்பந்தத்தை மத்திய அரசு மேற்கொண்டது.

அதை எதிர்த்தும் கச்சத்தீவை மீட்கக் கோரியும் 1991 ஆம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் 2008 ஆம் ஆண்டிலும் 2011 ஆம் ஆண்டிலும் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்தியா மேற்கொண்ட ஒப்பந்தத்தின் விளைவாக, கச்சத்தீவு அருகே செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துகிறது.

எனவே, கச்சத்தீவை மீட்கவும் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Posts