Ad Widget

இராணுவத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஜனாதிபதி!- கூட்டமைப்பு விமர்சனம்

குற்றப்புலனாய்வு பிரிவின் அழைப்பை மீறி பாதுகாப்பு பிரிவின் தலைவர் வெளிநாடு சென்றமை தொடர்பாக, கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விமர்சித்துள்ளது.

ஜனாதிபதிக்கு தெரியாமல் பாதுகாப்பு பிரிவின் தலைவர் ரவீந்திர விஜேகுணரத்ன வெளிநாட்டிற்கு பயணிக்க வாய்ப்பில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வாக்குமூலமொன்றை பதிவுசெய்துக் கொள்வதற்காக ரவீந்திர விஜேகுணரத்ன குற்றப்புலனாய்வு பிரிவிற்கு கடந்த திங்கட்கிழமை அழைக்கப்பட்டிருந்தார்.

ஆனால், குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகாத பாதுகாப்பு பிரிவின் தலைவர் அன்றைய தினம் மெக்ஸிகோவிற்கு பயணித்துள்ளார்.

இந்நிலையிலேயே அவர் ஜனாதிபதிக்கு அறிவிக்காது வெளிநாடு செல்ல வாய்ப்பில்லை என கூட்டமைப்பின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டிய ஜனாதிபதி, உயர்மட்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக குற்றம்சாட்டப்படின் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறும், ஆனால் கைது செய்ய வேண்டாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிலிருந்து இராணுவத்தினரை பாதுகாக்கும் முயற்சிகளிலும் ஜனாதிபதி தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts