Ad Widget

இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் சூழ்ந்திருக்க வல்வெட்டித்துறையில் அஞ்சலி செலுத்தினார் சிவாஜி

தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறையில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று உயிர்நீர்த்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தினார்.

முள்ளிவாய்கால் படுகொலையின் 12வது ஆண்டு நினைவு நாளான நேற்று பல இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிலையில் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் அலுவலகத்திற்கு முன்பாக குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றபோது அதிகளவிலான இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் சூழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts