Ad Widget

இராணுவத்தளபதி மேஐர் ஜெனரல் சவேந்திர சில்வா யாழின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம்!

இராணுவத் தளபதி மேஐர் ஜெனரல் சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கு நேற்று(வெள்ளிக்கிழமை) விஐயம் செய்திருந்தார்.

இந்த விஐயத்தின் போது வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர்க்கந்தன் ஆலயத்தில் அவர் விசேட பூஜைவழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து நல்லை ஆதீனத்திற்கும் சென்ற அவர், ஆதீன குருமுதல்வர் ஞானதேசிக பராமாச்சாரிய சுவாமிகளைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

யாழ் நாகவிகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் விகாராதிபதியும் சந்தித்து அவர் ஆசி பெற்றிருந்தார்.

Related Posts