புது வருடத்தை முன்னிட்டு விஷேட சேவையில் ஈடுபட்ட இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகளின் சாரதிகள் மது போதையில் இருந்ததாக, பொலிஸார் குறிப்பிட்டமையானது முரன்பாடான விடயம் என இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
அவ்வாறானதொரு தகவல் தமக்கு கிடைக்கப்பெறவில்லை என இலங்கை போக்குவரத்துச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும் பொலிஸாரிடம் இது குறித்த அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கூறியுள்ளனர்.