Ad Widget

இன்றும் நாளையும் எரிவாயு விநியோகம் இடம்பெறாது – வரிசையில் காத்திருக்க வேண்டாமென அறிவிப்பு!

நாட்டில் இன்றும் (வியாழக்கிழமை) மற்றும் நாளையும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

7,500 மெட்ரிக் டன் கொண்ட இரண்டு எரிவாயுக் கப்பல்கள் தற்போது நாட்டை நோக்கி பயணிப்பதாகவும், ஒரு கப்பல் நாளை நாட்டிற்கு வரும் என்றும் மற்றைய கப்பல் ஞாயிற்றுக்கிழமை வரும் என்றும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இந்த இரண்டு கப்பல்களுக்கும் பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் முதல் ஏற்றுமதி வந்த மறுநாள் முதல் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

எனவே, முறையற்ற முறையில் எரிவாயுவை சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறும் அதிக விலைக்கு எரிவாயுவை வாங்கவோ அல்லது விற்கவோ வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Related Posts