Ad Widget

இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சலுக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு

நாட்டின் சகல பகுதிகளிலும் தீவிரமாக பரவியுள்ள இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சலுக்கான மருந்துகளுக்கு அரச வைத்தியசாலைகளிலும் தனியார் மருந்தகங்களிலும் பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் வயோதிபர்களை இலகுவாகத் தாக்கும் இந்த நோய்க்கு, உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் அது நிமோனியா காய்ச்சலுக்கு வழிவகுப்பதுடன் மரணத்தையும் ஏற்படுத்தும் என்று வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வைரஸ் காய்ச்சலுக்கான அத்தியாவசியமான ‘டெமிப்லு’ எனும் மருந்து, அரச வைத்தியசாலைகளில் தட்டுப்பாடாக இருப்பதுடன் குறிப்பிட்ட சில தனியார் மருந்தகங்களில் மாத்திரை ஒன்று 600 ரூபா வரை விற்கப்படுகின்றது.

இதன் காரணமாக சாதாரண மக்கள் இந்த மருந்தை மருந்தகங்களில் வாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது எனவும், சுகாதார அமைச்சு இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு தீர்வை வழங்கவேண்டும் என்றும் வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts