Ad Widget

இந்திய முன்னாள் வெளியுறவு செயலாளர்களுடன் சம்பந்தன் பேச்சு

இந்தியாவின் முன்னாள் வெளியுறவு செயலாளர்களான லலித் மண்சிங் மற்றும் பேராசிரியர் சுக் டியோ முனி ஆகியோர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த சந்திப்பு நேற்று (புதன்கிழமை) கொழும்பில் இடம்பெற்றிருந்தது.

இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைகளுக்கு மத்தியில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இலங்கையில் ஜனநாயக கோட்பாடுகள், அரசியலமைப்பு விதிகளுக்கு மதிப்பளிக்கப்படும் என நம்புவதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் ஜனநாயக ஏற்கனவே தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related Posts