Ad Widget

இது கொண்டாட்டம் நடத்துவதற்கு உரிய நேரம் இல்லை! – வரவேற்பு விழாவை நிராகரித்தார் விக்னேஸ்வரன்!!

vickneswaranவடமாகாண முதலமைச்சராக இன்று திங்கட்கிழமை பதவியேற்றுள்ள சி.வி.விக்னேஸ்வரன் கொழும்பில் தனக்கு வழங்கப்படவிருந்த வரவேற்பு விழாவை நிராகரித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சராக விக்னேஸ்வரன் இன்று பதவியேற்ற பின்னர், அவருக்கு கொழும்பில் வரவேற்பு விழா ஒன்றை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆனால், இவ்விழாவை விக்னேஸ்வரன் நிராகரித்து விட்டதாக இந்து கல்விக் சமூகத்தின் செயலாளர் கந்தையா நீலகண்டன் தெரிவித்துள்ளார்.

தனது தெரிவை கொண்டாட வேண்டிய தேவையில்லை எனவும், இது கொண்டாட்டம் நடத்துவதற்கு உரிய நேரம் இல்லை எனவும் விக்னேஸ்வரன் விழாவின் ஏற்பாட்டாளர்களிடம் கூறியுள்ளார்.

அத்துடன், தனது பதவியேற்பு நிகழ்வு முடிந்தவுடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக தான் உடனடியாக யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Related Posts