பிரம்மாண்டத்திலும் பிரமாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது கடந்த 16 ஆம் தேதி சென்னை நேரு அரங்கில் ஐ படத்தின் இசை வெளியீட்டு விழா. இந்த விழாவில் ஹாலிவுட் அதிரடி நாயகன் அர்னோல்ட் ஸ்வாஸ்னேக்கர், நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மற்றும் தென்னிந்திய திரைப்பட நட்சத்திரங்கள் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.இது பற்றி நிறைய விஷயங்கள் வெளிவந்திருந்தன.
இதில், விழா குறித்த நேரத்தில் ஆரம்பிக்காமல் தாமதமடைந்ததாகவும் அதனால் ஆர்னோல்ட், நம்ம சூப்பர்ஸ்டார் உட்பட பலர் கடுப்படைந்ததாகவும், முக்கியமாக ஆர்னோல்ட் விழாவில் பாதியிலேயே வெளியேறியதாகவும் வதந்திகள் பரவியிருந்தன.
இந்தநிலையில் தான் தற்போது இந்த நிகழ்வுக்கே மகுடம் வைப்பது போன்ற ஒரு விடயம் நடந்தேறியிருக்கிறது. சிறப்பாக நடந்து முடிந்த இசை வெளியீட்டு விழா குறித்து “ஐ” படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரனுக்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் கடிதம் எழுதியுள்ளார்.
அதில்’ நான் இதுவரை எத்தனையோ ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் போன்ற பெரிய விருது விழாக்களுக்கு சென்றுள்ளேன். ஆனால் அவர்கள் எல்லாம் நிகழ்ச்சியை எப்படி நடத்த வேண்டும் என்று உங்களிடம் தெரிந்துகொள்ள வேண்டும்’ என்று தான் அனுப்பியுள்ள உத்தியோகபூர்வ கடிதத்தில் மிக பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். அவர் அனுப்பியுள்ள அந்தக்கடிதமும் உங்களுக்காக…………
#வாழ்த்தியிருக்கிறாரா…? இல்லை……வாழ்த்துவது போல, உண்மையை உபதேசம் செய்திருக்கிறாரா….? எல்லாம் அவருக்கே வெளிச்சம்…#