Ad Widget

ஆறு நிமிடத்தில் பிரித்தானியா அழியும்..! ஆண்டின் இறுதியில் புடின் வகுத்துள்ள பயங்கர திட்டம்

பிரித்தானியாவை 6 நிமிடங்களில் தாக்கி அழிக்கும் பயங்கரமான ‘சாத்தான் அணு ஆயுத ஏவுகணையை’ போர் தாக்குதலில் பயன்படுத்தபோவதாக ரஸ்ய அதிபர் புடின் உறுதியளித்துள்ளார்.

உக்ரைனிய அதிபர் ஜெலென்ஸ்கி போர் நடவடிக்கை தொடங்கிய பிறகு முதல் முறையாக டிசம்பர் 21ம் திகதி புதன்கிழமை வெளிநாட்டு சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.

அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து கூடுதல் இராணுவ உதவி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ள, அதே சமயம் ரஸ்ய அதிபர் விளாடிமிர் புடினும் தனது இராணுவ தலைவர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இந்த ஆலோசனையின் போது ரஸ்யாவிற்கு எதிராக உக்ரைனின் ஆயுதம் திரட்டும் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ரஸ்யாவின் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஹைப்பர்சோனிக் சாத்தான்-2 ஏவுகணைகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் போர் முனையில் நிலைநிறுத்த போவதாக அதிபர் புடின் உறுதியளித்துள்ளார்.

அத்துடன் இவை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts