Ad Widget

ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி யாழிலும் போராட்டம்!

அட்டுலுகம சிறுமி ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி யாழில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்குக் கிழக்கு பெண்கள் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில்
யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் ஒன்று கூடிய போராட்டக்காரர்கள் ஆயிஷாவின் மரணத்துக்கு நீதி கோரி கோஷங்களை எழுப்பினர்.

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் 8 மாவட்டங்களில் ஆயிஷாவிற்கு நீதி கோரி இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related Posts