காங்கேசன்துறை வீதி, தாவடிப்பகுதியிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) காலை ஆணின் சடலம் ஒன்றை மீட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியிலுள்ள கடை ஒன்றின் முன்னால் இருந்தே இச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் தாவடி தெற்குப்பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய குடும்பஸ்தர் என இனங்காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.