மட்டுவில் மத்தியைச் சேர்ந்த வைரமுத்து ஞானகௌரி (வயது 41) என்ற ஆசிரியையை, கடந்த 23ஆம் திகதி முதல் காணவில்லையென்று அவருடைய உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
புதன்கிழமை (23) கோயிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றவர், வீடு திரும்பவில்லை என்று அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.