Ad Widget

ஆசிரியர் சங்கத்தின் போராட்டத்தை எதிர்த்து போராட்டம்

யாழ். மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினர், திங்கட்கிழமை (06) நடத்திய போராட்டத்துக்கு எதிரான போராட்டமொன்று அதே தருணத்தில் பேருந்து நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்றது.

1(7576)

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 15 அம்சக்கோரிக்கைகள் அடங்கிய போராட்டம் ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

இதன்போது, அங்கு சில பதாகைகளுடன் வந்த நால்வர் ஆசிரியர் சங்கத்தின் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைவர்கள் ஆசிரியர்களை நடு வழியில் கைவிட்டுவிடுவார்கள், வேண்டாம் வேண்டாம் ஆசிரியர்களை ஏமாற்ற வேண்டாம், ஆசிரியர்கள் இறைவனுக்கு சமமானவர்கள் அவர்களை வீதியில் இறக்கி அல்லல்படுத்தாதீர்கள. போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைககளை கைகளில் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இருந்தும், எதிர்ப்பு போராட்டக்காரர்கள் சிறிது நேரத்தில் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி
கல்விச் செயற்பாடுகளில் ராணுவத்தலையீட்டை எதிர்த்து யாழில் ஆர்பாட்டம்

Related Posts