Ad Widget

அவசரமாக கூடுகிறது கூட்டமைப்பு?

தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனாதிபதி தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானத்தை எதிர்வரும் திங்கட்கிழமை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று அந்த கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையில் எதிர்வரும் திங்கட் கிழமை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு செயற்படுவது யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றி பொது மக்களை மீள்குடியேற்றல், சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை ஆகிய மூன்று கோரிக்கைகளுக்கும் சாதகமான உறுதிமொழியை வழங்கும் வேட்பாளருக்கு எதிர்வரும் தேர்தலில் ஆதரவளிக்கப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts