Ad Widget

அரியாலையில் ரயிலுடன் கார் மோதி விபத்து: சாரதி சம்பவ இடத்திலேயே சாவு!

அரியாலை தொடருந்துப் பாதையில் பயணித்த கார், கடுகதி தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் குடும்பத்தலைவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தார்.

இந்தச் சம்பவம் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த குளிரூட்டப்ட்ட கடுகதி தொடருந்துடனேயே இந்த விபத்து இடம்பெற்றது.

காரை கராஜூக்கு கொண்டு சென்றுவிட்டு திரும்புகையிலேயே குடும்பத்தலைவர் உயிரிழந்தார்.

தெல்லிப்பளையைச் சேர்ந்தவரே இவ்வாறு உயரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் அவருடைய விபரம் வெளியாகவில்லை.

Related Posts