Ad Widget

அரசியல் தீர்வு குறித்து கோட்டாவிடம் எழுத்து மூல கோரிக்கை – டக்ளஸ்

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எழுத்துமூல கோரிக்கையை முன்வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும், தமது இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.

வவுனியா மாவட்டத்தில் செயற்பட்டு வரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களுடன் அக்கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா இன்று (திங்கட்கிழமை) விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வில் எதிர்கால அரசியல் நிலைப்பாடுகள், தமது கட்சியினால் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள், எதிர்வரும் தேர்தலில் செயற்படுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு, சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான கருத்துப் பகிர்வுகளும் இடம்பெற்றிருந்தன.

Related Posts